காஞ்சிபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் இணை ஆணையர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
காஞ்சிபுரம், மார்ச் 8:
காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் ஓணகாந்தேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலுக்கு அருகிலேயே அக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.3 கோடி மதிப்பில் காஞ்சிபுரம் சரக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் செங்கல்லை எடுத்துக் கொடுத்து கட்டிடப்பணிகளை தொடக்கி வைத்தார்.
இவ்விழாவிற்கு காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி தலைமை வகித்தார். திருக்கோயில் அறங்காவலர் குழுவின் மாவட்ட தலைவர் எஸ்.தியாகராஜன், ஓணகாந்தேசுவரர் கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் வேல்முருகன், திமுக மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் தலைமை பட்டாச்சாரியார் கிட்டு,குமரகோட்டம் முருகன் கோயில் பூஜகர் சந்திரமௌலி குருக்கள் ஆகியோர் பூமி பூஜைகளை செய்தனர். விழாவில் அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ப.முத்துலட்சுமி,சீனிவாசன், அமுதா, திமுக பகுதி செயலாளர் தசரதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
முனனதாக சென்னையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக இணை ஆணையர் அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை தொடக்கி வைத்தார்.
No comments
Thank you for your comments