Breaking News

“ போஷான் பக்வாடா “ - இரு வார விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (09.03.2024) ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக, போஷன்   அபியான் போஷன் பக்வாடா ஊட்டச்சத்து குறித்த இரு வார விழிப்புணர்வு பேரணியை மாவட்ட  ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.


ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்சிகள்   “ போஷான் பக்வாடா “  நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு 9.3.2024 முதல் 23.3.2024 வரை நடத்தப்படுகின்றன. 

முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்  மாவட்ட  ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு போஷான் பக்வாடா-2024 ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு  உறுதிமொழி  ஏற்கப்பட்டது.

மேலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் மாவட்ட ஆட்சியரகத்தில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. ஊட்ட சத்துடன் கூடிய முன்பருவக்கல்வி குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் அளிக்கப்பட்டது. பாலுட்டும் தாய்மார்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே வழங்குமாறும் மேலும் ஊட்ட சத்து மிக்க உணவு குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்விற்க்கு அடிப்படையாகும் மேலும் இரண்டு வயதிற்க்கு மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்து ஊட்ட சத்துடன் கூடிய முன்பருவக் கல்வியை அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.பாலாஜி, மாவட்ட திட்ட அலுவலர்           திரு.பா.கந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், போஷான் அபியான் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments