விலைவாசியை குறைக்கத் தவறி விட்டது மத்திய அரசு - டி.ஆர்.பாலு எம்பி குற்றச்சாட்டு
காஞ்சிபுரம், மார்ச் 8:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்பியும்,மாவட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவருமான டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
எம்பி க.செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் மத்திய அரசு செய்து வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து அரசின் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யாசுகுமார்,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் ஒன்றியக் குழுவின் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்குப் பின்னர் டி.ஆர்.பாலு எம்.பி கூறியதாவது..
கடந்த 2014}இல் பெட்ரோல் விலை ரூ.32 ஆகவும்,சமையல் எரிவாயு உருளை விலை ரூ.400 ஆகவும் இருந்தது.ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமர் மோடி இவற்றின் விலையை குறைப்பேன் என்றார்.ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ.102 ஆகவும்,சமையல் எரிவாயு உருளை ரூ.1200 ஆகவும் உள்ளது.டீசல் விலை ரூ.95 க்கும் மேலாகி விட்டது.விலைவாசியை கட்டுப்படுத்தி மத்திய அரசு தவறி விட்டது.ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறியதையும் செய்யவில்லை.ஒவ்வொரு வீட்டுக்கும் சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை எடுத்து ரூ.15லட்சம் தருவேன், இட்டு வைப்பு செய்வேன் என்றார் எதையும் செய்யவில்லை.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள் இதுவரை எங்களை அணுகவில்லை. தங்களது நிலத்தைக் கொடுத்தால் அதற்குரிய நஷ்ட ஈடு வழங்கப்படும்.இது தொடர்பான கோரிக்கைக்கு அரசு உரிய நேரத்தில் விளக்கம் அளிக்கும்.ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளேன். யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதை கட்சித் தலைமையை முடிவு செய்யும் எனவும் டிஆர் பாலு தெரிவித்தார்.
No comments
Thank you for your comments