Breaking News

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் -கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற  விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டம்  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (20.02.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை,  கூட்டுறவுத் துறை,  வருவாய்த் துறை,  ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த  கூட்டத்தில்  கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.


 இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு சங்கம் மூலம்  5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,09,053/- மதிப்பிலான பயிர் கடன்களும்,

மூலம்  9 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களும்,  வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில்,  2 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான்கள் மற்றும் 2 விவசாய பயனாளிக்கு தார்பாய்கள் என மொத்தம் 4 விவசாய  பயனாளிகளுக்கு  ரூ.19,020 மதிப்பிலான   மானியத்துடன்  கூடிய  இடுபொருட்களும், ஆக மொத்தம் 18 விவசாய பயனாளிகளுக்கு, ரூ.7.78 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன்  கூடிய  வேளாண்   இடுப்பொருட்களை  மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்,  கூட்டுறவு துறை மண்டல  இணை  பதிவாளர்  திருமதி.பா.ஜெயஸ்ரீ,  வேளாண்மை  இணை  இயக்குநர்  முனைவர். பிரின்ஸ்  கிளமென்ட்,  விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

 இதற்கு முன்னதாக விவசாயிகள்  நலன்  காக்கும்  நாள்  கூட்டத்தில்  2024-2025-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிகழ்ச்சியினை காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய்  அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டனர்.

No comments

Thank you for your comments