விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் -கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்
இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், கூட்டுறவு சங்கம் மூலம் 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.4,09,053/- மதிப்பிலான பயிர் கடன்களும்,
மூலம் 9 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,50,000/- மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடன்களும், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், 2 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான்கள் மற்றும் 2 விவசாய பயனாளிக்கு தார்பாய்கள் என மொத்தம் 4 விவசாய பயனாளிகளுக்கு ரூ.19,020 மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஆக மொத்தம் 18 விவசாய பயனாளிகளுக்கு, ரூ.7.78 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் முனைவர். பிரின்ஸ் கிளமென்ட், விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையினை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிகழ்ச்சியினை காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பார்வையிட்டனர்.
No comments
Thank you for your comments