Breaking News

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், பிப்.21-

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை கணினி அறிவியல் தொடர்பான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகள் கலையரங்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.கணினி அறிவியல் துறையின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.உதவிப் பேராசிரியர் கே.நித்தியானந்தன் வரவேற்று பேசினார்.பஜாஜ் நிதி நிறுவன மூத்த மேலாளர் ஜி.கார்த்திகேயன் கணினி அறிவியல் தொடர்பான கையேடுகளை வெளியிட்டு பேசினார்.

சென்னை போரூரில் உள்ள இண்டெல்சாட் தகவல் தொழில் நுட்ப பூங்கா கணினி மென்பொறியாளர் வி.ரமேஷ் கலந்து கொண்டு தகவல தொழில் நுட்பத்தில் வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விரிவாக பேசினார்.

கருத்தரங்க நிறைவில் பொது அறிவு,தகவல் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பரிசினை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.நிறைவாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கே.துளசிராம் நன்றி கூறினார்.


படவிளக்கம்}கருத்தரங்கில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பரிசினை பெற்ற காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

No comments

Thank you for your comments