Breaking News

கூட்டுறவு ஒன்றியத்துக்கு கல்வி வளர்ச்சி நிதி அளிப்பு

காஞ்சிபுரம், பிப்.21:

ராஜகுளம் மற்றும் கோவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறறவு கடன் சங்கங்கள் சார்பில் ஒன்றியத்துக்கான கல்வி வளர்ச்சி நிதியை இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீயிடம் சங்க நிர்வாகிகள் புதன்கிழமை வழங்கினர். 


கோவூர் மற்றும் ராஜகுளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறறவு கடன் சங்கங்கள் ஈட்டிய லாபத்தொகை மொத்தம் ரூ.33,66,711. கூட்டுறறவு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வி நிதியாக கூட்டுறறவு ஒன்றியத்துக்கு சேர வேண்டிய தொகையினை கோவூர் கூட்டுறறவு கடன் சங்க செயலாட்சியர் ம.அனுஷா, இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீயிடம் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது கூட்டுறறவு ஒன்றிய சார் பதிவாளர் சத்திய நாராயணன், ஒன்றிய அலுவலக மேலாளர் வி.முரளி, சங்க செயலாளர் ஜெய்சங்கர், ராதாகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments