Breaking News

சுந்தரமூர்த்தி நாயனார் இடக்கண் ஒளி பெற்ற விழா

காஞ்சிபுரம், பிப்.21:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இடக்கண் ஒளி பெற்ற விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.


சிவனடியார்கள் 63 பேரில் சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒருவர்.இவர் இறைவன் சொல்லை மீறி நடந்து கொண்டதால் கண்பார்வை இழந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 

மீண்டும் கண்பார்வை பெற அவர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வணங்கி ஆலந்தான் உகந்து என்ற பதிகம் பாடி இடக்கண் பெற்றதாக ஐதீகம்.

இவ்விழா ஆண்டு தோறும் மாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. 

பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

இவ்விழாவில் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த ஆலந்தான் உகந்து என்ற பாடலைப் பாடி வழிபட்டனர்.

No comments

Thank you for your comments