Breaking News

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மதுரை ஆதீனம் தரிசனம்

காஞ்சிபுரம், பிப்.26-

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரியா சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தார்.



மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரியா சுவாமிகள் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு விஜயம் செய்தார்.சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் தலைமையிலான குழுவினர் அவரை வரவேற்றனர். 

மடத்தில் உள்ள மகா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தார்.

அவருக்கு சங்கர மடத்தின் சார்பில் மாலை அணிவித்து பிரசாதமும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், தமிழ்த்துறை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் தெய்வசிகாமணி,காஞ்சி சங்கர மடவரவேற்புக் குழுவின் நிர்வாகிகள் டி.கணேஷ்,சுப்பிரமணியன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

காஞ்சி சங்கர மடத்தின் தரிசனத்தையடுத்து காமாட்சி அம்மன் கோயில்,ஏகாம்பரநாத சுவாமி கோயில் ஆகியனவற்றிலும் தரிசனம் செய்தார்.

படவிளக்கம்}காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு தரிசனம் செய்ய வந்திருந்த மதுரை ஆதீனம் ஹ ரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்

No comments

Thank you for your comments