Breaking News

காஞ்சிபுரத்தில் இளைஞர் இலக்கியத் திருவிழா

காஞ்சிபுரம், பிப்.26:

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியின் கலையரங்கத்தில் பொது நூலக இயக்கம் சார்பில் இளைஞர் இலக்கியத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை,பொது நூலக இயக்ககம்,காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆணைக்குழு மற்றும் பச்சையப்பன் மகளிர் கல்லூரி ஆகியன இணைந்து கல்லூரி கலையரங்கில் இளைஞர் இலக்கியத் திருவிழாவை நடத்தினார்கள். விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் மு.கோமதி தலைமை வகித்தார்.மாவட்ட நூலக ஆய்வாளர் ஏ.கணேசன்,கூடுவாஞ்சேரி நூலகர் கு.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி நூலகர் த.கவிதா வரவேற்று பேசினார்.

விழாவில் பேச்சு,ஓவியம்,வினாடிவினா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவியர்க்கு பாராட்டு சான்றிதழையும்,நினைவுப்பரிசையும் மாவட்ட நூலக அலுலவலர் ரா.கிருஷ்ணமூர்த்தி வழங்கி பேசினார். நிறைவாக நல் நூலகர் விருது பெற்ற நா.லாவண்யா நன்றி கூறினார்.பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகளும் விழாவின் நிறைவில் நடைபெற்றன.


No comments

Thank you for your comments