Breaking News

இளையனார் வேலூர் முருகன் கோயிலில் லட்சார்ச்சனை

காஞ்சிபுரம், பிப்.12:

காஞ்சிபுரம் அருகேயுள்ள இளையனார் வேலூர் முருகன் கோயிலில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தியையொட்டி லட்சார்ச்சனை திங்கள்கிழமை நடைபெற்றது.


படவிளக்கம் : லட்சார்ச்சனையையொட்டி வள்ளி,தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த இளையனார் வேலூர் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே இளையனார் வேலூர் கிராமத்தில் செய்யாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது பழமையான பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் மூலவர் குழந்தை பாலமுருகனாக காட்சியளிக்கிறார். 

ஆண்டு தோறும் மாசி மாத வளர்பிறை சதுர்த்தியையொட்டி 6 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். 

இந்த ஆண்டு லட்சார்ச்சனை விழா நிகழ் மாதம் 10 ஆம் தேதி தொடங்கி வரும் 15 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது. 3வது நாளாக திங்கள்கிழமை நடைபெற்ற லட்சார்ச்சனை ரவி குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

லட்சார்ச்சனையையொட்டி வள்ளி, தெய்வானையுடன் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுளை கோயில் செயல் அலுவலர் சுரேஷ்,மேலாளர் செங்குட்டுவன் ஆகியோர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments