விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.20.74லட்சம் நிதியுதவி- காவலர் காக்கும் கரங்கள் அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்,பிப்.12:
படவிளக்கம் : விபத்தில் உயிரிழந்த இளங்கோவின் குடும்பத்தினரிடம் ரூ.20.74லட்சத்துக்கான நிதியுதவிக் காசோலையினை வழங்கிய காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்.உடன் காவலர் காக்கும் கரங்கள் அமைப்பின் நிர்வாகிகள்
காஞ்சிபுரம் நகர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றி வந்தவர் இளங்கோ. இவரது குடும்பத்தினர் ராணிப்பேட்டை மாவட்டம் புதூர் கிராமத்தில் வசித்து வந்தனர்.இளங்கோ விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் பணிமுடித்து வீட்டுக்கு செல்லும் போது புதூர் கிராமம் அருகே இவர் ஓட்டிய வாகனம் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இளங்கோ காலமானதையடுத்து அவரது குடும்பத்தினரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இவர் பணியில் சேர்ந்த 2017 ஆம் ஆண்டு காவலர்கள் ஒன்றிணைந்து காவலர் காக்கும் கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கி இருந்தனர்.
இந்த அமைப்பு தங்களோடு பணியில் சேர்ந்தவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது. இதன்படி இந்த அமைப்பின் நிர்வாகிகள் காமராஜ்,விக்னேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இக்குடும்பத்தினருக்காக மொத்தமாக ரூ.20,74லட்சம் வசூல் செய்திருந்தனர்.
இத்தொகையினை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கே.சண்முகத்திடம் வழங்கி அவர் மூலமாக இளங்கோவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது. காக்கும் காவலர்கள் அமைப்பில் 32 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் இவர்கள் இளங்கோவைப் போல விபத்தில் உயிரிழந்த பல குடும்பங்களுக்கு உதவியிருப்பதாகவும் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments