Breaking News

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை கேட்டு மனு- உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம்,பிப்.12:

காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத இரு பெண் குழந்தைகளுடன் அதே குறைபாடுடைய பெற்றோரும் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அரசு உதவித்தொகை கேட்டு காஞ்சிபுரம் ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



காஞ்சிபுரம் அருட்பெருஞ்செல்வி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர்,சரசு தம்பதியர்.இவர்களுக்கு ஜீவிதா(8) நஷிதா(6) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இவர்கள் 4 பேரும் காது கேட்காத,வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிளாக இருந்து வருகின்றனர். நெசவுத்தொழில் செய்து வரும் இத்தம்பதியர் தங்களது இரு பெண் குழந்தைகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அக்கோரிக்கை மனுவில் தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யுமாறு கடந்த இரு ஆண்டுகளாக மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தங்களுக்கு அரசு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். தம்பதியர் சைகைமொழியில் ஆட்சியரிடம் பேசியது அருகில் இருந்த பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 

No comments

Thank you for your comments