Breaking News

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 19 வருட சிறை தண்டனை - ரூ.15,000 அபராதம் விதிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புண்ணியகோட்டீஸ்வரன் தெரு, மொட்டக்குளம், சதாவரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள(22) த/பெ இராமகிருஷ்ணன் என்பவர் கடந்த 02.08.2018 அன்று 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தது சம்பந்தமாக அப்போதைய காவல் ஆய்வாளர் திரு.திருநாவுக்கரசு அவர்கள் வழக்கு பதிவு செய்து எதிரியை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். 


பின்னர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றம் செய்யப்பட்டு. வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.விஜயலட்சுமி, நீதிமன்ற காவலர் திருமதி.லதா மற்றும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி.K.மைதிலிதேவி M.L., ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.

இந்நிலையில் இன்று (05.01.2024), மேற்படி வழக்கின் எதிரி பெருமாளுக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி.R.K.P.தமிழரசி. M.L., அவர்கள் மேற்படி எதிரி குற்றவாளி என உறுதிசெய்து 19 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 15,000 அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் நிவாரணத் தொகை வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழஙகியுள்ளது.

மேலும், இவ்வழக்கில் எதிரிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments

Thank you for your comments