தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்
கோவை மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் வசு தெய்வ குடும்பம் எனும் தலைப்பில் ஆண்டு விழா கொண்டாட்டம்.
இந்த பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சம்ஹிதா அறக்கட்டளையின் அறங்காவலரும், இயக்குநருமான ஆஷா தாமஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய ஒற்றுமையை எடுத்து கூறும் விதமாக உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,இந்தியாவின் பன்முக தன்மையை எடுத்து கூறும் விதமாக மாணவ,மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.குறிப்பாக திமழ்நாடு,கேரளா,பஞ்சாப்,ஆந்திரா ,கர்நாடகா,மகாராஷ்டிரா என இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார நிகழ்சிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் நடனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முன்னதாக தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் செயல்பாடு குறித்து பேசிய பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன்,எங்களது பள்ளியில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி, விளையாட்டு, அறிவியல் என அனைத்து திறன்களையும் ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments