மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (18.12.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 356 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 5 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.3,97,500/- மதிப்பிலான கடன் உதவிகள், இதில் ரூ.1,16,666/- அரசு மானியமாக வழங்கப்பட்டது. மேலும் இயற்கை மரணம் அடைந்த 2 மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு ஈமச்சடங்கிற்கான நிதியுதவி ரூ.34,000/-மும், 4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.27,360/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments