Breaking News

வேலூரில் அ.தி.மு.க. சார்பில் அம்பேத்கர் நினைவு நாள்

 வேலூர் ,டிச.7-

டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் வடக்கு காவல் நிலையம் (மக்கன் சர்கிள்) அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு அ.தி.மு.க. வேலூர் மாநகர் மாவட்ட  செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர்.சுப்பிரமணியம் ஆகியோர்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்திருந்த வேலூர் மாநகர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம். ஏ.ராஜா வீரவணக்க கோஷங்களை எழுப்ப அ.தி.மு.க.வினர் வீரவணக்கம் செலுத்தினார்கள்.


நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலாளர் ஜனனி.பி.சதீஷ்குமார், மாவட்ட இணை செயலாளர் சுகன்யா தாஸ், மாவட்டத் துணைச் செயலாளர் ஜெயபிரகாஷ், பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, ஜெய்சங்கர், நாகு, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம் டி பாபு, 4-வது மண்டல பகுதி பொருளாளர்  கோட்டிஸ், வழக்கறிஞர் பாலச்சந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சூளை மணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ராகேஷ், கலை பிரிவு மாவட்டச் செயலாளர் டி.டி.ஆர். ரகு, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே எம் ஆனந்தன், இலக்கிய அணி மாவட்டத் தலைவர் ஏ.சுரேஷ், இலக்கிய அணி மாவட்ட இணை செயலாளர் தனஞ்செழியன், இலக்கிய அணி துணைச் செயலாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலர்கள்  பிச்சைமுத்து, ( மக்கான்) மேகநாதன் (கொணவட்டம்) 6-வது வட்ட கழக செயலாளர் ந.எழிலரசன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments