மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து அறிவெளி கலைக்குழு மூலம் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் மற்றும் TN RIGHTS திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான மூன்று சக்கர வாகன பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினையும் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்கள். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments