Breaking News

ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் நடைப்பயிற்சி இயக்கம்

திருவள்ளூர் :

திருவள்ளூர்  மாவட்டம் தமிழக மக்களிடம் நடைபயிற்சியை ஊக்குவிக்கவும் நலமுடன் இருக்கவும்  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு சிந்தனையில் உதயமான நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடை பாதை திட்டத்தை இன்று (04.11.2023) சென்னையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். 


இதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்காவில் மாவட்ட ஆட்சியரா பிரபுசங்கர்.இஆ.ப. அவர்கள் 8 கிமீ நடைப்பயிற்சியை துவக்கி வைத்து முன்னாள் அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் முன்னிலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். 

உடன் ஆவடி காவல் ஆணையரகம் ஆணையர் கி.சங்கர் இ.கா.ப, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார்,   ஆணையர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் இ.ஆ.ப, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் இ.ஆ.ப., சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.சேகர், துணை இயக்குநர்கள் (சுகாதாரம்) மரு.ஜவஹர்லால் உள்ளிட்டோர்கள் கலந்துக்கொண்டனர்

No comments

Thank you for your comments