Breaking News

மாவட்ட நிர்வாகம் எங்களை ஏமாற்றி விட்டது - பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் குற்றச்சாட்டு

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அண்மையில் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.  


இந்த அனுமதியை கண்டித்தும் அது குறித்து விளக்கம் பெறவும் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சே.வெங்கடேசன் அவர்களை விமான நிலைய எதிர்ப்பு குழுவினர் சுப்பிரமணியன் என்பவர் தலைமையில் நேரில் சந்தித்து விளக்கம் கேட்டனர். 

அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் எங்களை ஏமாற்றி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

486 நாட்களாக விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராடிவரும் எங்களை மாவட்ட நிர்வாகம் ஏமாற்றி விட்டது. 

நீர்வள ஆதாரம் கெடும் வகையில் பரந்தூர் விமாலய அமைப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பல ஆதாரங்கள் எடுத்து வைத்தும் எங்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. 

குடியிருப்புகளை பாதுகாப்போம். உங்களை கைவிடாமல் காப்பாற்றுகிறோம். உங்களைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் வாக்குறுதி தந்து விட்டு இப்போது நிலம் எடுக்க நிர்வாக அனுமதி வழங்கியிருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. 

நாங்கள் எங்கள் நிர்வாக குழுவிடம் தொடர்ந்து பேசி அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பி ஆட்சியர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலியஸ் ஜீசஸ் தலைமையிலான காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையும் கைது செய்தனர்.

No comments

Thank you for your comments