தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் 2024 மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம் - அமைச்சர்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் 2024 மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இன்று (22.11.2023) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரில் உள்ள தனியார் விடுதி அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் 2024 மாநாட்டிற்காக முன்னோட்ட கருத்தரங்கம் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த உள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். வேளாண்மைக்கு அடுத்தபடியாக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குவது MSME துறை ஆகும்.
உயர் கல்வியில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்பை உருவாக்கி தந்திடவும், 2030-ல் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையவும், மாண்புமிகு முதல்வர் தலைமையில் வரும் ஜனவரி மாதம் 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
தொழில் துறையில் முதலீடுகள் மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று இதுவரை, தொழில் துறையில் வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், 241 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 196 கோடி முதலீடுகளை ஈர்த்து, 4 லட்சத்து 15 ஆயிரத்து 252 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்துள்ளார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அயராத உழைப்பினாலும், சீரிய திட்டங்களாலும், இந்திய அளவில், தொழில் துறையில், 14 ஆம் இடத்திலிருந்த தமிழ்நாடு இன்று 3-ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
தமிழ்நாட்டை, தொழில் துறையில் இந்தியாவிலேயே முதலிடத்திற்கு கொண்டு வர நடத்தப்பட உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தொழில் துறைக்கும், MSME துறைக்கும் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் இலக்கு நிர்ணயித்து ஆணையிட்டுள்ளார்கள்.
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொழில் முதலீடு மாநாடுகள் நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு MSME தொழில் நிறுவனங்கள் வாயிலாக, ரூ. 4 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கும் அதிகமாக 320 MSME தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ. 4 ஆயிரத்து 102 கோடியே 77 லட்சம் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இன்று நம் முன்னியிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது.
இதன் மூலம், நமது மாவட்டத்தில், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உணவு பதப்படுத்தும் தொழில்கள் தோல் பொருட்கள் ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 18 ஆயிரத்து 404 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
Single widow 2.0 திட்டம் மூலம் தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்கான உரிமங்களை விரைந்து பெறுவதற்கு அரசு துறைகள் வழங்கும் 163 வகையான சேவைகளை இணைய வழியில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவையின் மூலம், இதுவரை, 26,480 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 24,117 தொழில்முனைவோருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று புரிந்துணர்வு போடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும், இத்திட்டத்தின் மூலம் அனுமதிகள் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
சுயதொழில் திட்டங்கள் மூலம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 5 வகையான சுயதொழில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை ரூ.1,099 கோடியே 86 லட்சம் மானியத்துடன் ரூ.3 ஆயிரத்து 890 கோடியே 59 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 30 ஆயிரத்து 981 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் மூலம் ரூ.126 கோடியே 84 லட்சம் மானியத்துடன், ரூ. 256 கோடியே 7 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 1065 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புதிய தொழில்முனைவோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.35 கோடியே 38 லட்சம் மானியத்துடன், ரூ.120 கோடியே 82 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 1,211 படித்த இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர்.
இதில், 555 மகளிர் 247 பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், 63 சிறுபான்மையினர், 28 மாற்றுத்திறனாளிகள், தொழில்முனைவோராக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
MSME திட்டங்கள் மூலம் தமிழகத்தின் MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் இந்தியாவிலேயே முதன் முறையாக சொத்து பிணையில்லா கடன் பெற தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 25,348 தொழில் முனைவோர்களுக்கு ரூ.3,477 கோடியே 72 லட்சம் வங்கி கடன் உதவிக்கு 410 கோடியே 78 லட்சம் கடன் உத்தரவாதத்தை அரசு அளித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Tamil Nadu-TReDS MSME நிறுவனங்கள் மூலம் தங்கள் விலை பட்டியல்களை வங்கிகளில் வைத்து விரைவாக கடன் பெற- தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் Tamil Nadu-TReDS ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், MSME நிறுவனங்களின் ரூ.6,900 விலைப்பட்டியல்களுக்கு, ரூ.1,289 கோடியே 22 லட்சம் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். MSME தொழில்களின் வளர்ச்சிக்காக மாண்புமிகு முதல்வர் அவர்களால் ரூ.324 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில், 519 ஏக்கர் பரப்பளவில் 8 தொழிற்பேட்டைகள் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
325.64 ஏக்கர் பரப்பளவில் 8 புதிய தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறுந்தொழில் நிறுவனங்களின், மூலதன செலவை குறைக்கவும், உடனடியாக தொழில் தொடங்கவும், கிண்டி, அம்பத்தூர், சேலம் ஆகிய இடங்களில், ரூ.175 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 264 தொழில் கூடங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் விரைவில் மாண்புமிகு முதல்வர் அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளன.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும், அவற்றை வர்த்தக ரீதியாக தயாரிக்கவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் Start-Up –TN என்ற இயக்கத்தை துவக்கி, அதற்கான நிதியினை ஒதுக்கி புதிய திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன் மாதிரியான திட்டங்களால், Start-Up தர வரிசையில் இந்திய அளவில் கடைசி இடத்திலிருந்த தமிழ்நாடு, 3-ஆம் நிலைக்கு முன்னேறி "லீடர்" தகுதியை பெற்றுள்ளது. Start-Up -TN மூலம் இதுவரை 153 - ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு 41 கோடி 96 லட்சம் பங்குகளாக முதலீடாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தாக்க சிந்தனைக் கொண்ட நம் இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்திட தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஆட்சி பொறுப்பேற்று, இதுவரை 8 லட்சத்து 98 ஆயிரத்து 812 இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த 2 ஆண்டுகளில், 266 புதிய கண்டுப்பிடிப்பாளர்களுக்கு ரூ.7 கோடியே 39 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.4000 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.4102.27 கோடிக்கான 320 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இதன் மூலம் 18404 வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள் கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில் துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.
விண்வெளி, தகவல்தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவு பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உட்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கியதளமாக செயல்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன் மூலம் வாங்குபவர் விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும்.
மேலும் இம்முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரியகாலத்தில் பெற்றிட ஒற்றை சாளர தகவு வழியாக பெற்றுத் தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இம்மாநாட்டில், அரசு செயலர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை திருமதி.அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திரு.எல்.நிர்மல்ராஜ் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, மற்றும் உள்ளாட்சி பிரிதிநிதிகள், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரு.வா.ச.வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments