காலநிலை மாற்ற பயிலரங்கம் நடைபெற்றது - இடர்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்... கலந்துரையாடல்...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், இன்று (13.10.2023) சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் காலநிலை மாற்ற பயிலரங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டு பல்வேறு செயல் திட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது.
இன்று நடைபெற்ற பயிலரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து, ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்கள்.
இப்பயிலரங்கில் காஞ்சிபுரம் மாவட்ட காலநிலை மாற்றத்தை குறித்தும், இந்த ஆண்டிற்கான மழைப்பொழிவின் மாறுதலை பற்றியும், மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தை பற்றியும், அரசு அலுவலர்களுடன் கலைந்துரையாடினார்கள்.
பல்வேறு துறைகளில் இருந்து அரசு அலுவலர்கள் பயிலரங்கத்தில் கலந்து கொண்டுள்ளதால் இதனை ஒரு நல்ல வாய்ப்பாக கருதி காலநிலை மாற்றத்தால் நமது மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் எந்தவிதமான இடர்பாடுகள் வரலாம் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த பயிலரங்கத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இப்பயிலரங்கில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்ககம் துணை இயக்குநர் மணிஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க.சங்கீதா, தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சுற்றுச்சூழல் துறை வல்லுனர்களும் மற்றும் அரச அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments