Breaking News

போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபர்கள் கைது


ஆவடி :

ஆவடி காவல் ஆணையரகம், பூந்தமல்லி காவல் நிலைய எலலைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே கண்காணித்து கொண்டிந்த போது TN 12 AQ 7518 என்ற Blue Color Pulsar Bike மற்றும் TN 13 Y 1303 Dio Orange Color Bike ல் வந்த  நபர்கள் 1.ஆகாஷ் வ/23 த/பெ பெரியசாமி, எண். 53, வள்ளலார் தெரு, முகப்பேர் மேற்கு, சென்னை-37, 2. மாறன் வ22, த/பெ பிரமானந்த், எண். 221, 3 வது பிளாக், பாலமுருகன் கோயில் தெரு, முகப்பேர், சென்னை-37, 3.சீனுராஜ் வ/19, த/பெ சேகர். எண். 36, அம்மன் கோயில் தெரு, ரெட்டிபாளையம் முகப்பேர் மேற்கு, சென்னை-37 4. ஆனந்த், வ/19, த/பெ ராஜா. எண். 543, 2வது பிளாக், பால் பூத், முகப்பேர் மேற்கு, சென்னை-37 என்பவர்களை பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு.M.கிளாஸ்டின் டேவிட் மற்றும் தனிப்படையினர் இந்த நபர்களை  மடக்கி பிடித்தனர்.




மேற்படி இந்த நபர்கள் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்த போது அதில் Nitravet-10 mg என்னும் போதை மாத்திரைகள் ஒரு அட்டைக்கு 30 மாத்திரைகள் வீதம் மொத்தம் 124 அட்டைகள் இருந்தது தொடர்பாக விசாரணை செய்த போது இந்த நபர்கள் உல்லாசவாழ்க்கைக்கு பணம் அதிகாமாக தேவைப்பட்டதால் போதை மாத்திரை விற்பனை மூலமாக அதிக பணம் தங்களுக்கு கிடைக்கும் என்று    மேற்படி எதிரிகள் அனைவரும் Nitravet -10 mg என்னும் போதை மாத்திரைகள் ஹைதராபாத்திலிருந்து கள்ளத்தனமாக வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததாகவும் தற்போது விற்பனை செய்வதற்காக போதை மாத்திரைகளை பேக்கில் வைத்திருந்ததாகவும் விசாரணையின் போது தெரிவித்தனர். 

இந்த நபர்களிடமிருந்து Nitravet-10 mg ஒரு அட்டைக்கு 30 மாத்திரைகள் விதம் 124 அட்டைகள் 30 x 124 = 3720 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. இந்த நபர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 நபர்களையும் குற்றவியல் நடுவர் பூந்தமல்லி நீதிமன்றம் எண்.II அவர்கள் முன்பு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர்களை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்

No comments

Thank you for your comments