Breaking News

சேதமடைந்த தரைப்பாலம், சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

வாலாஜாபாத் - அவளூர் இடையே பாலாற்றின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலம், சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பு.

2 கோடியே, 75 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் சாலையை ரிப்பன் வெட்டி உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ க.சுந்தர் துவக்கி வைத்தார்.

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டதால் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுக்காவில் வாலாஜாபாத்தையும் அவளூரையும் இணைக்கும் வகையில் பாலாற்றின் குறுக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலம் கடந்த காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக  ஆங்காங்கே துண்டிக்கப்பட்டு சேதம் அடைந்த நிலையில் இருந்தது.

இதனை தற்காலிகமாக செப்பனிட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் நிரந்தரமாக சீரமைப்பு செய்து வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, வாலாஜாபாத் அவளூர் இடையிலான தரைப்பாலத்தை சீரமைக்க உத்தரவிட்டிருந்தது.

அதன்படி போர்க்கால அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சாலை சீரமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் விழா நடைபெற்றது.

தரைப்பால சாலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ  க.சுந்தர் கலந்து கொண்டு ரிப்பன் பெட்டி தரைப்பாளர் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

தரைப்பாலத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உத்திரமேரூர் தொகுதி எம்எல்ஏ   க.சுந்தர்,  கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வாலாஜாபாத் - அவளூர்  இடையிலான தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளதாகவும்,  காஞ்சிபுரம் உத்திரமேரூர்  நெடுஞ்சாலையில்  செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மாகரல்- வெங்கச்சேரி இடையிலான உயர் மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்று உள்ளதாகவும், இந்த உயர்மட்ட மேம்பால சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகு விரைவில் திறந்து வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், ஒன்றிய குழு தலைவர்கள் ஆர்கே. தேவேந்திரன், மலர்க்கொடி குமார்,ஒன்றிய செயலாளர்.பி சேகர்,பேரூர் செயலாளர் பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தனசீலன், உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன்,உதவி பொறியாளர் விஜய்,மற்றும் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments