காஞ்சிபுரத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா
காஞ்சிபுரம், அக்.10:
காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா திங்கள்கிழமை பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறத்தில் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனத்தில் முழுநேர பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் அண்மையில் பெறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பயிற்சி வகுப்பு தொடக்க விழா அந்நிறுவன கூட்ட அரங்கில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை துணைப் பதிவாளர் கே.மணி, பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் துணைப்பதிவாளர் மு.உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் சு.உமாபதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மு.முருகன் கலந்து கொண்டு முழுநேர பயிற்சி வகுப்பின் பயன்கள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.
நிறைவாக நிறுவனத்தின் விரிவுரையாளர் ரா.ராஜேஸ்வரி நன்றி கூ றினார். தொடக்க விழாவில் பயிற்சியில் புதியதாக இணைந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விரிவுரையாளர்கள் உட்பட கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments