காஞ்சிபுரத்தில் தபால் தலைகள் கண்காட்சி
படவிளக்கம் : அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தபால்தலைகளின் வரலாறு குறித்து விளக்கம் அளிக்கும் காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ்
காஞ்சிபுரம், அக்.11:
காஞ்சிபுரம் தலைமை தபால் அலுவலகத்தில் தேசிய அஞ்சல் வார விழாவை கொண்டாடுவதையொட்டி தபால் தலைகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய அஞ்சல் வார விழாவையொட்டி 3 வது நாளாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் தலைகள் கண்காட்சி நடைபெற்றது.
அஞ்சல்துறையின் காஞ்சிபுரம் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் கண்காட்சியை தொடக்கி வைத்து அதனை பார்வையிட வந்த பல்வேறு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தபால் தலைகளின் வகைகள், தோன்றிய வரலாறு, தபால்தலை சேகரிப்பின் பயன்கள் ஆகியன குறித்து விளக்கினார்.
அஞ்சல் துறையின் உதவி கோட்ட கண்காணிப்பாளர் பிரகாஷ், தலைமை தபால் நிலைய அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் அஞ்சலக வளர்ச்சி அலுவலர்கள் கேசவன், பாலாஜி, அருண் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை அஞ்சல்துறை மூலம் பார்சல்கள் அனுப்புவது பற்றிய விவரங்களை விளக்கும் நிகழ்வும், வெள்ளிக்கிழமை முதியோர்களை கௌரவிக்கும் விழாவும் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது.
No comments
Thank you for your comments