Breaking News

பொங்கல் பண்டிகை - ரெயில்களில் முன்பதிவு இன்று தொடக்கம்

சென்னை.செப்.13-

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரெயில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.



ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் பயண நாளுக்கு 120 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்து கொள்ளலாம். 120 நாட்களுக்கு முன்பு காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கப்படும். 

ரெயில் நிலையங்களில் நேரடியாக சென்றும் ஆன்லைன் மூலமாகவும் பெற விரும்புபவர்கள் காலை 8 மணியிலிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணம் மேற்கொள்பவர்களுக்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்ய நாளை, ஜனவரி 13-ந் தேதி பயணம் செய்வோர் வருகிற வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 15) முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு தை 1-ந் தேதி பொங்கல் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி (திங்கட்கிழமை) வருகிறது. முந்தைய நாள் போகி பண்டிகை (ஞாயிற்றுக் கிழமை) வருகிறது. பொங்கல் பண்டிகையை தொடர்ந்து திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என ஜனவரி 16, 17-ந் தேதி வரை விடுமுறை இருக்கும்.

இதனால் ஜனவரி 12-ந் தேதி வெள்ளிக்கிழமையிலிருந்தே பண்டிகை கொண்டாட்டம் களைகட்டி விடும். சனி, ஞாயிறு விடுமுறையை சேர்த்தால் வருகிற ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதை போல் சுற்றுலாவிற்கு செல்லவும் பலர் திட்டமிடுவார்கள்.

முன்பதிவு திறக்க உள்ள நிலையில் பயணிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் ஊர் திரும்புவதற்கும் ஏற்ற வகையில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


No comments

Thank you for your comments