மணிப்பூரில் மீண்டும் பதற்றம்... 3 பேர் சுட்டுக்கொலை
இம்பால், செப்.13-
மணிப்பூரில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறை
மணிப்பூரில் கங்போப்கி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதக் குழுவினர் நேற்று அதிகாலை 3 மணியளவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி ஸோ இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதக் குழுவினர் ஒரு வாகனத்தில் வந்ததாகவும் அவர்கள் மேற்கு இம்பால் - கங்போப்கி மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லை கிராமங்களால் இரங், கராம் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. மலைகிராமங்களான இந்த இரு கிராமங்களிலும் பழங்குடி மக்களே அதிகம் வசிக்கின்றனர்.
மீண்டும் தாக்குதல்
முன்னதாக கடந்த 8-ந் தேதி டெங்னோபால் மாவட்டத்தில் பாலல் எனுமிடத்தில் நடந்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தச் சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இன்று இன்னொரு தாக்குதல் நடந்துள்ளது.
மே 3-ல் தொடங்கிய வன்முறை: மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாகா, குகி போன்றவர்களை உள்ளடக்கிய பழங்குடியின மக்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதால் பதற்றம் உருவாகியுள்ளது.
No comments
Thank you for your comments