Breaking News

கட்டண வாகன பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்தார் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான  வெங்கடகிரிராஜா தோட்டம் அருகில்,  கட்டண வாகன பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்கள். 


காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான  வெங்கடகிரிராஜா தோட்டம் அருகில், இன்று (22.08.2023) கட்டண வாகன பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான  வெங்கடகிரிராஜா தோட்டத்தில் (AKG மஹால் அருகில்) காஞ்சிபுரத்தில் வாகன நெரிசல் தவிர்க்கும் பொருட்டு, கட்டண வாகன பாதுகாப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்கள். 

வாகன பாதுகாப்பு மையத்தினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகி வரும் வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான  வெங்கடகிரிராஜா தோட்டத்தை (AKG மஹால் அருகில்)  1.75 ஏக்கர் பரப்பளவில்   வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திட தேவையான வசதிகள் செய்து தரப்படும். 

இதனால் நகரில் வாகன நெரிசல் குறையும் என்பதையும், இது போன்று ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான நகர புலஎண்.3036/5ல்(யாத்ரி நிவாஸ்) 8.27 ஏக்கரிலும், உலகளந்த பெருமாள் கோவிலுக்கு சொந்தாமன நகர புல எண்.755/1A மற்றும் 756ல் 1.86 ஏக்கரிலும், மேட்டுத் தெருவிலுள்ள நகரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நகர புல எண். 285/1 முதல் 16 வரை 6.59 ஏக்கரிலும் மற்றும் சித்தேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான நகர புல எண். 432/1ல் 0.61 ஏக்கரிலும் நிரந்தர வாகனம் நிறுத்துமிடம் அமைத்திட சம்மந்தப்பட்ட கோவில் நிலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

விரைவில் இவ்விடங்கள் வாகன நிறுத்தி வைக்கும் இடங்களாக மாற்றப்படும். இதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் அதிகரிக்கும். கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர்,  காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.க.கண்ணன் மற்றும் அறநிலையத்துறை  அலுவலர்கள், கோவில் அறங்காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments