Breaking News

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி ஆணை வழங்கல்

முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், இந்து கல்லூரியில் இன்று (12.08.2023) நடைபெற்றது.



இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற நபர்களுக்கு  மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் ஆகியோர் பணி ஆணைகளை வழங்கி முன்னாள் அமைச்சர்/ ஆவடி சட்டமன்ற உறுப்பினர் திரு.சா.மு.நாசர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வாழ்த்து தெரிவித்தனர். 

test banner

உடன் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் திரு.என்.ஓ.சுகபுத்ரா இ.ஆ.ப., வேலைவாய்ப்பு துறை மண்டல இணை இயக்குநர் திருமதி.ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநர் திருமதி.விஜயா, தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட

No comments

Thank you for your comments