முத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருவிளக்கு பூஜை 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.
காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத திருவிளக்கு பூஜை 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தியஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்
அந்த வகையில் ஆலய நிர்வாக குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி குங்குமச்சனை மற்றும் சிறப்பு சங்கல்பம் செய்து அர்ச்சனைகள் செய்து வழிபாடு செய்தனர்
இதனை தொடர்ந்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு மஞ்சள். குங்குமம். ரவிக்கை. மாங்கல்யம். உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்பட்டது
விழா ஏற்பாடுகளை பிரகாஷ்சில்க்ஸ் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது இதில் ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments