மணிப்பூர் கலவரத்திற்கு கண்டித்து மக்கள் நீதி மய்யம் கண்டன ஆர்ப்பாட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக மணிப்பூர் கலவரத்திற்கு பொறுப்பேற்று அந்த மாநில அரசை, மத்திய பா.ஜ.க. அரசு கலைக்க வலியுறுத்தி, காஞ்சி தாலுகா அலுவலகம் எதிரில், கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.ஜி.மெளரியா தலைமையில், காஞ்சிபுரம் மண்டல மாநில செயலாளர் எஸ்கேபி. பி.கோபிநாத் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் காஞ்சி.த.கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments