ஓபிஎஸ்-ன் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார மேடை அமைக்கும் பணிக்கு பந்த கால் நடும் விழா
காஞ்சிபுரம் :
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், செப்டம்பர் 3ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார பயணம் காஞ்சிபுரத்தில் உள்ள கலியனுர் பகுதியில் தொடங்க உள்ள நிலையில் பிரச்சார மேடை அமைக்கும் பணிக்கு பந்த கால் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சர் ஆன ஓ பன்னீர்செல்வம் அவர்கள் செப்டம்பர் மூன்றாம் தேதி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் இதற்காக காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்று வரும் இந்த பணியின் ஏழாவது நாளான இன்று பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிக்கு பந்தக்கால் நட்டு பூமி பூஜை செய்து மாவட்டச் செயலாளர் ஆர்வி ரஞ்சித் குமார் அவர்கள் துவக்கி வைத்தார்
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது இதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தேர்தல் பிரச்சார பயணம் தொடங்க அம்மா பிறந்த ஊரான காஞ்சிபுரம் அருகே உள்ள கலியலூர் பகுதியில் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார் அதன்படி அதற்குண்டான பணிகளை மாவட்ட செயலாளர் ஆர்வி ரஞ்சித் குமார் அவர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்
மூன்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஐந்து ஏக்கர் இடத்தை சுத்தம் செய்து வருகிறார் இந்த ஏற்பாடுகளை கண்ட அப்பகுதி மக்கள் திகைத்து வருகின்றனர் தேர்தல் பிரச்சாரம் நடைபெற இருக்கும் இடத்திற்கு வருகை தரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு படப்பையில் இருந்து பல வண்ண தோணங்களால் அலங்கரிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது மேலும் அண்ணா வீட்டிற்கு சென்று அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கிறார்
முத்தியால்பேட்டை பகுதியில் பாராளுமன்றம் போல் வடிவமைத்து நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது சுமார் நூறு பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படவுள்ளது இதன் ஒரு பகுதியாக இன்று பந்தக்கால் நட்டு பூஜைகள் செய்து வெகு சிறப்பாக துவங்கப்பட்டுள்ளது இக்கூட்டத்திற்கு கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பத்தாயிரத்திற்குள் மேற்பட்டோர் அணி திரள வாள்கள் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ் ரங்கநாதன் மாவட்ட கழக பொருளாளர் எ. வஜ்ரவேலு மாவட்ட கழக இணை செயலாளர் கோமளா ஏழிலரசன், வாலாஜாபாத் பேரூராட்சி கழக செயலாளர் ஆர் ஜெயகாந்தன், கோவிந்தராஜன் காஞ்சிபுரம் கிளை ஒன்றிய கழக செயலாளர் மாகரல் என் சசி உத்திரமேரூர் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெ முனிரத்தினம் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி. வெங்கடேசன் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என் அருண் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஏ மாலிக் பாஷா மாவட்ட இணை அமைப்பு செயலாளர் எஸ் எத்தேந்திரன் மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஜி தட்சிணாமூர்த்தி மாவட்ட பாசறை செயலாளர் இ ஜெயராமன் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் பூக்கடை ஜகா காஞ்சிபுரம் பகுதி கழக செயலாளர் ஏ பழனி வி. முரளி மாவட்ட தொழில் பிரிவு செயலாளர் ஜே எம் சண்முகம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் எம் தேவன் ஒன்றிய எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் எம் சந்திரசேகரன் மாநகர அம்மா பேரவை செயலாளர் புது உதயம் எஸ் ஆர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments