காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு... ரூ.58 லட்சம் காணிக்கை
காஞ்சிபுரம் :
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காமாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-7-2023ஆம் தேதிக்கு பிறகு கோவிலில் இருந்த இரு உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரொக்கமாக 58,51,470/- தங்கம் 190 கிராம் ,வெள்ளி 460 கிராம் இருந்தது. கோயில் செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா, கோவில் செயல் அலுவலர் கள் பா. முத்துலட்சுமி, அமுதா, மற்றும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் கீர்த்தி வாசன், ஜெயராமன், மற்றும் காமாட்சி அம்மன் கோவில் மணியக்காரர் சூரிய நாராயணன் ஆகியோரும் உண்டியல் எண்ணும் பணியினை மேற்பார்வை செய்தனர்..
No comments
Thank you for your comments