Breaking News

மதிய உணவு திட்டத்தினை ஆட்சியர் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புக்குழி ஊராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினையும், திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புக்குழி ஊராட்சியில், இன்று (29.08.2023) கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணியினையும், திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புக்குழி ஊராட்சியில் பெறப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களை பணியாளர்கள் வீடுவீடாக சென்று சரிபார்க்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.  மேலும்  திருப்புக்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தினை பார்வையிட்டு, மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவினை சாப்பிட்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்கள். தொடர்ந்து பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையினை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு மேற்கொண்டு,  பள்ளியில் ரூ 93.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 6 வகுப்பறைகள் கொண்ட  கூடுதல் பள்ளி கட்டிட பணிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments