Breaking News

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் குறைபாடுகள் இருப்பின் குறை தீர்ப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்கலாம்

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில்  குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியான திரு.வீ.கணேசன் என்பவரை 8925811309 மற்றும் 9962986168 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், 

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பிரிவு 30(1)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குட்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடுகளில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக காஞ்சிபுரம் மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியாக திரு.வீ.கணேசன் என்பவர் கடந்த 10.03.2022 முற்பகல் முதல் பணிபுரிந்து வருகின்றார்.

 

இந்நிலையில் மேற்கண்ட குறை தீர்ப்பு அலுவலரை கூடுதலாக பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(கிகுறித்தான குறைகளை நிவர்த்தி செய்திட பயன்படுத்தி கொள்ளுமாறு மத்திய அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

எனவேபிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில்  குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட குறை தீர்ப்பு அதிகாரியான திரு.வீ.கணேசன் என்பவரை 8925811309 மற்றும் 9962986168 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

மேலும்பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பாக ஏதாவது புகார் அளிக்க விரும்பினால் புகார் மனுக்களை மாவட்ட குறை தீர்க்கும் அலுவலர் (Ombudspersonமாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகாஞ்சிபுரம் என்ற முகவரி மற்றும் ombudsman@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments