Breaking News

இரு சக்கர வாகனங்களை திருடிய நபர் கைது

காஞ்சிபுரம்

  • காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடிய நபர் கைது,
  • அவரிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
  • விஷ்ணு காஞ்சி போலீசார் நடவடிக்கை.


காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மா. சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தை திருடி செல்ல முயன்ற வாலிபரை பிடித்து விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை தாலுக்கா, வள்ளுவப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பதும்,அவர் அவ்வப்போது இரு சக்கர வாகனங்களை திருடி செல்வதை கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்த விஷ்ணு காஞ்சி போலீசார் அவரிடம் இருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments