Breaking News

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டம்

காஞ்சிபுரம்  :   

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்  சங்கம் சங்கம், பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி ஊழியர் சங்கம் ஆகவே இணைந்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம்  நடைபெற்றது. 


சங்க பொதுச் செயலாளர் கே .பி. ரமணன்  தலைமை தாங்கினார் கூட்டுறவு  வங்கி ஊழியர்  சம்மேளன  பொதுச் செயலாளர் சர்வேசன், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் பி ஆர்  ஹரிஹரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். 

இதில் மத்திய வங்கி ஊழியர்களுக்கும் , நகர வங்கி உயிருக்கும் அடிப்படை சம்பளம், பஞ்சப்படி,ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை சம்பந்தமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், மாநில வங்கி மத்திய  இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி என உருவாக்கிட வேண்டும், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூப்புநிலை பட்டியல் வெளியீட வேண்டும், தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயத்திலும் கட்டணத்தை கல்வி சலுகையாக வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. 

இதில் மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சிவப்பிரகாசம் நேரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments