ஆடி மாதம் முடிந்த பிறகும் தொடரும் அம்மன் கோவில் திருவிழாக்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கடேச பாளையத்தில் ஆடி மாசத்தை முன்னிட்டு, அங்காளம்மன் திருவீதி உலா நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பல்வேறு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி மாசம் நிறைவு பெற்ற பிறகும் பல்வேறு பகுதிகளில் ஆடி மாத திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது அந்தவகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அதிகம் துப்புரவு பணியாளர்கள் குடியிருக்கும் பகுதியாக வெங்கடேச பாளையம் அமைந்துள்ளது.
இப்பகுதியில் ஆடி மாதத்தௌ முன்னிட்டு அங்காளம்மன் திருக்கோவிலில் 3 நாள் திருவிழா மிக விமர்சியாக நடைபெற்று வருகிறது. கூழ் வர்தல் நிகழ்வானது இன்று நடைபெற்றது .
அதில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 50 அடி நீளம் கொண்ட அலகு குத்தி, மினி வேன் இழுத்தும், முதுகில் கொக்கி கொத்திக் கொண்டு அந்தரத்தில், தொங்கிக்கொண்டும் பத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் வீதி உலா நடைபெற்றது .
வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் பல்வேறு பகுதிகளில் வீதி உலா ஆனது நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments