Breaking News

வாக்குச்சாவடி பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம்...

 காஞ்சிபுரம்


இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் பணி தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரைவு  வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடும் பணி காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வரைவு வாக்கு சாவடி பட்டியலை வெளியிட்டு திமுக,அதிமுக, பாஜக, காங்கிரஸ், பிஎஸ்பி, கம்யூனிஸ்ட், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வழங்கினார்.

அவ்வாறு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வழங்கிய போது ஆளும் கட்சியான திமுகவிற்கும், எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் முன்னுரிமை அளிக்காமல் அருகில் இருந்த அரசியல் கட்சியினரை அழைத்து வரைவு வாக்கு சாவடி பட்டியலை வழங்கினார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகளும், அதிமுக நிர்வாகிகளும், மாவட்ட ஆட்சியரிடம் தங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வாக்குசாவடி பட்டியலை வெளியிட்டது குறித்து அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு நிகழ்ச்சியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சமாதானம் செய்ததை தொடர்ந்து அரசியல் கட்சியினர் மறைவு வாக்குச்சாவடி பட்டியலை பெற்றுச் சென்றனர்.

No comments

Thank you for your comments