காஞ்சி கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர்
- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்ட கலெக்டர்...!!!!
- முதலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கியதால் அதிருப்தி அடைந்த ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட பிறக் கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழக்கமான நடைமுறையை பின்பற்றி முதலில் ஆளுங்கட்சி,அதன் பின் எதிர்க்கட்சி, பிறக்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது..!!!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சியினர் முன்னிலையில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்வு இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆளுங் கட்சியான திமுக,எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் காங்கிரஸ்,பாஜக,பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம்,உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ்,காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ரம்யா,ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் சரவணன் கண்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கு இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வழங்கும் போது முதலில் பகுஜன் சமாயஜ் கட்சியினருக்கு வழங்கியதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
காலம் காலமாக முதலில் ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி அதன் பின்பு தான் காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட பிறக் கட்சிகளுக்கு வழங்கப்படும் வேளையில் ஆளுங் கட்சியான திமுகவிற்கு மாவட்ட ஆட்சியர் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கொடுக்காததால் அதிருப்தி அடைந்த திமுக நிர்வாகிகள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டு முறையிட்டனர்.
ஒருபுறம் வழக்கமான நடைமுறையை தான் பின்பற்ற வேண்டும் என ஆளுங்கட்சியான திமுக,எதிர்க்கட்சியான அதிமுக வலியுறுத்திய நிலையில் தேசிய கட்சியான எங்களுக்கு தான் முதலில் வழங்கிட வேண்டும் என பாஜக கட்சியினர் மறுபுறம் முறையிட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
அதன் பின் மாவட்ட ஆட்சியர் வழக்கமான நடைமுறையை பின்பற்றியே வரைவு வாக்குச்சாவடி பட்டியலை கொடுப்பதாக சமாதானம் தெரிவித்து அதன் பின் ஆளுங்கட்சியான திமுக,எதிர்க்கட்சியான அதிமுகவிற்கு வழங்கி விட்டு காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட பிறக்கட்சிகளுக்கு வழங்கினார்.
No comments
Thank you for your comments