காஞ்சிபுரம் மாநகராட்சியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாநகராட்சியின் லஞ்சம் லாவண்யங்களை கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மாநகராட்சி இல்லாமல் "மாநரகமாக" மாறி கொண்டு இருப்பதாகவும், அதிகாரிகளும் பணியாளர்களும் கையூட்டு பணம் வாங்குவதாக, கோவில் நகரத்தை தூய்மையாக வைக்காமல் குப்பை நகரமாக இருப்பதாகவும், அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் அதிகம் உள்ளது. நகர் நலப்பிரிவில் சுகாதார ஆய்வாளர்கள் தொடர்ந்து வருவாய் இழப்பு செய்து வருகிறார்கள்,
மத்திய அரசால் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் காஞ்சிபுரம் மாநகராட்சிக்காக, ஒதுக்கி தரப்பட்ட பெரிய தொகை மூலமாக நடைபாதையில் கம்பம் அமைத்து அழகு படுத்துவதற்காக, மின்விளக்கம் கம்பங்கள் தரமற்ற முறையில் அமைத்ததால், தற்போது அவை பழுதடைந்துள்ளது,
எல்லா பிரிவிலும் ஊழல் நடைபெற்று வருவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி, இன்று காஞ்சிபுரம் காவலன் கேட் பகுதியில் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றுது. இந்த போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர்கள் எல்லம்மாள், சங்கர், ராஜ்குமார், கூரம் விஸ்வநாதன் விவசாய அணி தலைவர் பிரபாகர் , செயலாளர் காயத்ரி பங்கேற்றனர்.
No comments
Thank you for your comments