தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், இன்று (24.08.2023) குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லா மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குழு ஆய்வு தொழிற்சாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் அவர்களின் ஆணைப்படியும் Child Line, சமூக சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் புகார்களின் அடிப்படையில் தொழிற்சாலைகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு குழு ஆய்வு நமது மாவட்டத்தின் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ஆய்வுகளின் போது மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளிப்படிப்பினை தொடர வழி வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளர்கள் வருவாய் துறையினர் மூலம் மறுவாழ்வு அளித்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் பணி புரியும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீது குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 2016ன் படியும் கொத்தடிமை தொழிலாளர்கள் பணிபுரியும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் மீது கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் 1976ன் படியும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் பெரும்பாலும் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளின் இல்லாத நிலையே உள்ளது. இருந்தபோதிலும் தமிழகத்தின் செங்கற் சூலைகள், அரிசி ஆலைகள், சாயப்பட்டறைகள் போன்ற தொழிற்சாலைகள் இதற்கு முன்பு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை மீட்கப்பட்டுள்ளதை கருத்தில்கொண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகம் உள்ள அரிசி ஆலைகளில் குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் இல்லாத வண்ணம் செயல்பட அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அவர்களின் கருத்துக்கள் தங்களுக்கு மிகுந்த பயன் தரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் முனைவர்.பா.பாலமுருகன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் சாம் ராஜதுரை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.ஆர்.சக்தி காவியா உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி.ரோசான் ராஜன், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments