Breaking News

27.07.2023 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம்  :

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  மற்றும் Hand in Hand Academy for Social Entrepreneurship நிறுவனம் வாயிலாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்  மாவட்டம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  மற்றும் Hand in Hand Academy for Social Entrepreneurship நிறுவனம் வாயிலாக மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில்  27.07.2023 வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் அனைத்து வகையிலான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் இம்மாற்றுத்திறனாளிகள் 18 முதல் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.  வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கீழ் குறிப்பிட்ட ஆவணங்களுடன் வரவேண்டும்.

  • மாற்றுத்திறனாளியின் சுய விபரக்குறிப்பு (Resume) - 3 நகல்கள், 
  • பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் - 3, 
  • கல்விச்சான்றிதழ்களின் நகல்கள் - 3, 
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை - 3 நகல்கள்  
  • ஆதார் அட்டை - 3 நகல்களுடன் 

இம்முகாமில் கலந்துக் கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் அகாடமி  களியனூர் - வையாவூர் சாலை  களியனூர்  காஞ்சிபுரம் -636 531 எனும் நிறுவனம் முகவரியையும், மற்றும் 9443268192 (whatsapp), 7094491228 என்ற எண்களையும் தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். 

மாற்றுத்திறனாளிகள் அவசியம் இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments