ரேஷன் அரிசி கடத்தல் ...198 மூட்டை ( 8 டன்) பறிமுதல்
காஞ்சிபுரம் :
இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் இஆ.ப உத்தரவுப்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி . ரம்யா குடிமை பொருள் காவல் ஆய்வாளர் திருமதி .சசிகலா குடிமை பொருள் வழங்கல் வட்டாட்சியர் திருமதி . இந்துமதி குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் திரு.பிரகாஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் வந்த லாரியை விரட்டி ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் பெரும்புலிவாக்கம் என்ற இடத்தில் பிடித்து சோதனை செய்த போது சுமார் 198 மூட்டைகளில் சுமார் 8 டன் பொது விநியோகத் திட்ட அரிசி எவ்வித ஆவணங்களும் இன்றி கடத்தி சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.
லாரியும் பிடித்து காஞ்சிபுரம் நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க காவல் துறையால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments