Breaking News

இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டுகோள்

பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகள் / மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிந்து  இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள் (Potential Dropout)  மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான மாவட்ட அளவிலான குழுக் கூட்டம் (3-Tier Committee) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி காஞ்சிபுரம் மாவட்டம் 2023-24 ஆம் கல்வியாண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா (Never Enrolled) இடைநின்ற குழந்தைகள் (மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள் (Potential Dropout) கண்டறிந்து மீள பள்ளிக்கு வரவழைப்பதற்கான மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு (3-Tier Committee) அமைக்கப்பட்டுள்ளது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 


இதன் தொடர்ச்சியாக மாவட்ட குழுவின் கலந்தாலோசனை ஜ~லை மாத கூட்டம்  மாவட்ட  ஆட்சித் தலைவர்  அவர்கள்  தலைமையில் 12.07.2023  அன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர். மேலும் ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட குழு உறுப்பினர்கள் கல்வித் துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக அகற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments