Breaking News

தனியார் தொழிற்சாலை பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து

காஞ்சிபுரம் :


ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த நிஜாமுதீனை சேர்ந்தவர்கள் ஆறு பேர் ஒரு காரில் காஞ்சிபுரத்தில் கோயில்களில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் திருப்பதி நோக்கி புறப்பட்டனர்.

அப்போது காஞ்சிபுரத்திலிருந்து  அரக்கோணம் நோக்கி வழியாக சென்று கொண்டிருந்த போது சேந்தமங்கலம் பெட்ரோல் பங்க் அருகே எதிரே தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றி செல்லும் பஸ்,  கார் மீது நேருக்கு மோதியது.இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.  

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த வெங்கட்ரெட்டி( 55),  அவரது 20 வயது  இளைய மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் இருந்த நரசிங்( 42 ), ரமேஷ் (40),  கங்காதர் ரெட்டி( 45)  மற்றும் ஒரு வாலிபர் என நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த 4 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு வரப்பட்டு தீவிர சகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பஸ்சில் இருந்த தனியார் கம்பெனி பெண் ஊழியர்கள் 10 பேர் லேசான காயமடைந்தனர்.இவர்களில் சிலர் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments