காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையகங்களில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் , கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்து ,விற்பனை செய்வதை கண்காணிக்க கைத்தறி ஆணையரால் அமைக்கப்பட்ட பறக்கும் படை (22.07.2023) ஆய்வு செய்தனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 -ன் படி கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதை கண்காணிக்க கைத்தறி ஆணையரால் அமைக்கப்பட்ட பறக்கும் படை காஞ்சிபுரம் சரக காவல்துறை உதவியுடன் காஞ்சிபுரம் காந்தி சாலையில் இயங்கி வரும் வரமகாலட்சுமி சில்க்ஸ், பிரகாஷ் சில்க்ஸ்,நடுத்தெருவில் இயங்கி வரும் A.S பாபு ஷா சில்க்ஸ் மற்றும் PSK தெருவில் இயங்கி வரும் கோல்டன் சில்க்ஸ் மற்றும் ஹேண்ட் லூம் வீவர்ஸ் ஜவுளி கடைகளில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஹேண்ட் லூம் வீவர்ஸ் ஜவுளி கடையில் வெளி மாநிலத்திலிருந்து விசைத்தறியில் உற்பத்தி செய்து கொள்முதல் செய்யப்பட்ட சேலைகள் பட்டு முத்திரை அச்சிடப்பட்ட லேபிள் ஒட்டி விற்பனை செய்வது கண்டறியப்பட்டுள்ளது. அக்கடைக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985ன்படி 6 (1) நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால் இதர ஜவுளி கடைகள் இம்மாதிரியான விதி மீறல்கள் இல்லாமல் கவனமுடன் செயல்பட கேட்டுக் கொள்ளப்படுகிறது. சட்டத்தை மீறுபவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments