Breaking News

ஸ்ரீ மம்மளகாளி உடனாகிய யோக காலீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கூழ்வார்த்தை விழா

காஞ்சிபுரம் அடுத்த கீரனூர் கிராமத்தில் ஸ்ரீ மம்மளகாளி உடனாகிய யோக காலீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத கூழ்வார்த்தை விழா விமர்சையாக நடைபெற்றது.  


காஞ்சிபுரம் அடுத்த கீரநல்லூர் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ மம்மளக்காளி  உடனாகிய யோக காளீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத முதல் வார கூழ்வார்த்தல் விழா மற்றும் பால்குட விழா விமர்சையாக நடைபெற்றது 

🔥Also Read சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதை எவ்வாறு கண்டறிவது...?

ஆலய தர்மகத்தா அம்புஜம்பாள் சித்தர் அரிகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் காலை அரி கிருஷ்ணசாமிக்கு சிறப்பு பாத பூஜை நடைபெற்றது.

இதைதொடர்ந்து விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்மன் ஆலயத்திற்கு 108 பெண்கள் பால்குடம் எடுத்தும். அலகு குத்தியும். நெருப்புச் சட்டி எடுத்தும் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர் 

🎆 Also Read சந்திராஷ்டம தினங்களில் என்னென்ன செய்யலாம்?

இதனைத் தொடர்ந்து கூழ்வார்த்தை நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு தூபதீப ஆராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

இதில் ஆலய பூஜகர். சிவ.கோ .தேவராஜ் சிவம் .மற்றும் பொதுமக்கள் இணைந்து விழாவை சிறப்பாக செய்திருந்தனர் இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகன் லோகநாதன் ஜோதி முரளி பூபதி கண்ணன் லட்சுமணன் உள்ளிட்ட கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments