பல்வேறு திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு!
இன்று (11.07.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பி.செந்தில்குமார், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாங்காடு நகராட்சியில் வெள்ள தடுப்பு நிதியின் கீழ் ரூ.490 இலட்சம் மதிப்பீட்டில் திருமுருகன் நகர், பிரதான சாலை, திருவள்ளுவர் சிட்டியில் கட்டப்படும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், அப்பாவு நகர் முதல் ஓம்சக்தி நகர் இரண்டாவது பிரதான சாலை வரை ரூ.490 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் மற்றும் அன்னை இந்திரா நகர் முதல் பிரதான சாலை வரை ரூ.293 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் குன்றத்தூர் வட்டம் பரணிபுத்தூர் ஊராட்சியில் வெள்ள தடுப்பு நிதியின் கீழ் கட்டப்படும் கீழ்மட்ட கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, திருநீர்மலை வெள்ள தடுப்பு நிதியின் கீழ் அடையார் ஆற்றினை அகலப்படுத்தும் பணிகளையும், ராயப்பா நகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால்வாய் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் போரூர் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்பு வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்காடு ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல திட்ட நிதியின் கீழ் ரூ.319.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இருளர் இன பழங்குடியினர் மக்களுக்காக குடியிருப்புகளை 76 வீடுகளின் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வாலாஜாபாத் - அவளுர் சாலையில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் அய்யன்பேட்டை ஊராட்சியில் MLACDS திட்ட நிதியின் கீழ் ரூ.20.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடப் பணியினை ஆய்வு மேற்கொண்டு, அய்யன்பேட்டை ஊராட்சியில் NMP திட்ட நிதியின் கீழ் ரூ.4.96 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமயலறை கட்டிட பணியையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் செங்கழுநீரோடை வீதியில் புதியதாக ரூ.700 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இராஜாஜி மார்கெட் பணியினையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்பு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இவ் ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பிட்ஜெயின், இ.ஆ.ப., மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.கே.கவிதா, மாங்காடு நகராட்சி ஆணையர் திருமதி.சுமோ, நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு. பொதுப்பணித்திலகம், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.தனசீலன், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், வாலாஜாபாத் வட்டாட்சியர் திருமதி.சுபப்பிரியா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
No comments
Thank you for your comments