ஆவணங்கள் இல்லாத 250 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், திம்மசமுத்திரம் கிராமத்தில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் 10.07.2023 அன்று சுமார் இரவு 9.30 மணியவில் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் திருமதி.இந்துமதி மற்றும் குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் திரு.பிரகாஷ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் திம்மசமுத்திரம் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Eicher வண்டிகள் எண் TN 90F 0878 மற்றும்TN 22 AP 0483 வாகனங்களில் 250 மூட்டைகளில் சுமார் 9,000 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசி எவ்வித ஆவணங்களும் இன்றி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு கைப்பற்றுகை செய்யப்பட்டது.
கைப்பற்றுகை செய்யப்பட்ட இரண்டு வண்டிகள் மற்றும் அரிசி மூட்டைகள் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது
இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகளை கண்டுபிடிக்க காவல் துறையால் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments